Saturday, January 08, 2011

வெற்றியின் பாதை

இன்றைய நாளிதழில், அப்துல் கலாம் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடியதை பற்றி படித்தேன். அக்கலந்துரையாடலில், அவர் தான் எழுதிய பின்வரும் கவிதையை நினைவு கூர்ந்திருந்தார். படித்ததும் பிடித்தது.

எண்ணத்திலே தூய்மை இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்!
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்!
குடும்பத்தில் சாந்தி இருந்தால்
நாட்டில் சீர்முறையும், உலகத்தில் அமைதியும் நிலவும்!
நம்பிக்கையோடு எதையும் துணிவோடு செய்தால்
நாம் வெற்றி அடைவது உறுதி!
- அப்துல் கலாம்

No comments:

Post a Comment