Thursday, March 21, 2013

பொன்மொழிகள்...


  • நல்லவனாய் இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே. அதை விட முட்டாள் தனமான விஷயம் எதுவும் இல்லை.
  • ஆசைகளை திருப்தி செய்வதில் அல்ல. கட்டுபடுத்துவதில் தான் அமைதி உள்ளது.
  • கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அறியாமை தான் தீவினையின் மூலவேர்.
  • நல்ல நட்பை தேடிக்கொள்ள பல வருடம் போதாது. நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்.
  • ஒருவனின் காலடியில் வாழ்வதை விட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.
  • ஏமாற்றுவதை காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது.
  • விரிக்காத வரை சிறகுகள் பாரம் தான். விரித்து பார்த்தால் வானம் கூட தொடு  தூரம் தான்.
  • கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.

No comments:

Post a Comment